மூணாறில் நடத்தப்படும் கடும் சோதனை!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் ஜீப் சபாரி மற்றும் சுற்றுலா பயணிகளை ஏற்று செல்வதற்கு இலகுவாக கார், வேன், ஜீப் மற்றும் இரண்டு சக்கர வாகனம் போன்ற பலவித வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தடையும் இன்றி இடையூர் இன்றி பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏற்றதாக கடந்த சில தினங்களாகவே வட்டார போக்குவரத்து துறை சார்பாக பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வாகனங்களில் லைசன்ஸ், இன்சூரன்ஸ் பிட்னஸ் போன்ற சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது. சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல வாகனங்கள் நம்பர் பிளேட்டுகளை மாற்றியும் சரியாக லைசென்ஸ் இல்லாமல், சரியாக பிட்னஸ் சர்டிபிகேட் வாங்காமல் வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த சோதனையானது மூணார், தேவிகுளம் மறையூர் மற்றும் காந்தளூர் போன்ற பகுதியில் நடைபெற்றது. இன்னும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என மோட்டார் வாகன தலைவர் ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp