கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு பகுதியில் டாடா மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சை நடந்ததில் பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளி நீதி தேடி போராட்டம் நடத்தி வருகிறார். தேவிகுளம் எஸ்டேட் ஃபேக்டரி டிவிசனை சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி செல்வமணி தான் போராட்டம் நடத்தி வருவது. இவர் தனியார் மருத்துவமனையின் மூலமாக கர்ப்பப்பை அகற்றப்பட்டது அப்போது சிறுநீரகம் வெளியேறுவதற்காக இணைக்கப்பட்ட குழாய் மே 25ஆம் தேதி அகற்றினர்.
அதன் பிறகு சிறுநீரகம் வெளியேறிய வண்ணம் இருந்ததால் பலமுறை மருத்துவமனைக்கு சென்றும் பலன் இல்லை. அப்பொழுது அவர்கள் பயறு வகைகளை சாப்பிட்டால் சரியாகிடும் என்று கூறியுள்ளனர். அதற்கு பிறகும் சிறுநீரகம் வெளியேறியதால் மருத்துவமனை நிர்வாகம் கோட்டையம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் சிறுநீர்ப்பையில் ஆழத்தில் துளை உள்ளது கண்டறியப்பட்டது, அது அறுவை சிகிச்சையின் போது செய்த தவறு என உறுதி செய்யப்பட்டது. தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளி தவறு செய்த மருத்துவமனைக்கு முன்பு நீதி கேட்டு போராட்டம் நடத்தியும் பலனில்லை. தற்பொழுது மூணார் டவுனில் மையப்பகுதியான காந்தி சிலைக்கு அருகில் நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை நடத்துவதாக பெண் தொழிலாளி போராட்டம் நடத்தி வருகின்றார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.