கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் அமைந்துள்ள மூணாறு அரசு கல்லூரியில் நேற்றைய தினம் ஆர்ட்ஸ் டே இறுதிக் கொண்டாட்டம் நடைபெற்றது.கடந்த ஒரு வார காலமாக கட்டுரை, கதை எழுதுவது, கவிதை எழுதுவது, பேச்சுப்போட்டி, படம் வரைவது போன்ற பலவித போட்டிகள் நடைபெற்றது போட்டிகளில் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இறுதியாக நேற்றைய தினம் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ஜோஸ் (எழுத்தாளர்) மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் மனேஷ் என்.ஏ, கல்லூரி துணை முதல்வர் வந்தனா , தமிழ் துறை ஆசிரியர்கள் மற்றும் மலையாளத்துறை ஆசிரியர்கள் விளையாட்டு துறை, மற்றும் அனைத்து துறை ஆசிரியர்களும், அனைத்து ஆசிரியர்களும் மற்றும் மாணவச் செல்வங்களும் பங்கெடுத்தனர். கலை நிகழ்ச்சிகளுக்கு மிலிவு என பெயர்ச்சூட்டி நிகழ்ச்சிகளை துவங்கினார்கள். நிகழ்ச்சியில் ஆடல் மற்றும் பாடல் பாடுவது, குரல் மாற்றிப் பேசுவது, கவிதை சொல்வது போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்களை வெளியிட்டனர் மற்றும் வரும் தினங்களில் காலேஜ் டே அன்று சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கு சொந்தமாக கலைக்கல்லூரி இல்லை என்றாலும் கிடைத்த மேடையில் தங்களது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.