கோவை மாவட்டம் வால்பாறை இயற்கை எழில் மிகுந்த ஒரு சுற்றுலா தளமாகும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே வால்பாறையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் மேலும் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவதால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்ப்படும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சூழ்நிலையில் வால்பாறை டவுன் பகுதி மற்றும் காந்தி சிலை அருகில் இருக்கும் வியாபாரிகள் சிலர் தங்கள் கடைகளை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இடங்களை ஆக்கிரமித்து கடைகளை விரிவுபடுத்தி உள்ளனர். இதனால் நெடுஞ்சாலையின் அளவு குறைந்து சாலைகளில் வானங்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் சென்றுவர இட வசதி இல்லாமல் போய் உள்ளது.
மேலும் காந்தி சிலை வால்பாறை பஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் சாலையின் அளவு மிகவும் குறுகி விட்டதால் வாகனங்களை திருத்துவதற்கு கூட இடமில்லை. மேலும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி முடிந்து தங்களது பகுதிகளுக்கு செல்ல வரும் மாணவ மாணவிகள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் தடுமாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து பயணிகளும் நிற்க கூட இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். இதனால் நெடுஞ்சாலைத்
துறை அதிகாரிகள் வால்பாறை டவுன் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ள கடைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை கொடுத்துள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமைக்குள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ள கடைகளை ஒழுங்குபடுத்தி கொள்ளுமாறு எச்சரிக்கை அறிவிப்புகளை கொடுத்துள்ளனர். அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நெடுஞ்சாலை துறையினரே வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள் என நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வால்பாறை நகராட்சி துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.