விளாத்திகுளம் அருகே “அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில்” மாசி மக உற்சவ விழாவையொட்டி விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்: குவிந்த திரளான பக்தர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோவில்குமரெட்டையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மக உற்சவ விழாவையொட்டி இன்று மாலை தேரோட்டம் வெகுவிமர்சையாக ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் பிரசித்தி பெற்ற இத்திருகோவிலின் தேரோட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமம் கோவில்குமரெட்டியாபுரம். இக்கிராமத்தில் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சஷ்டி திருவிழா மற்றும் மாசித் திருவிழாவானது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாசி மக உற்சவ திருவிழாவானது கடந்த பிப்ரவரி 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசி மக உற்சவ விழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது.


இதனைத்தொடர்ந்து இந்த மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால், தேன், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மூலவர் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் “வெற்றிவேல்… வீரவேல்…” என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரானது நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பின் கோவிலை வந்தடைந்தது. இந்த புகழ்பெற்ற தேர்த்திருவிழாவை காண விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் இத்தேர்த் திருவிழாவை கண்டுகளித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp