அதிமுக-வில் இருந்து வந்தவருக்கு சீட்டு மக்கள் நீதி மய்யத்திலிருந்து வந்தவருக்கு நோ சொன்ன திமுக

கோவை மாவட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் டாக்டர் மகேந்திரனை தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கப்போகிறது திமுக என்று நம்பகத்தன்மை வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில் அரசியல் வட்டாரத்திலும் டாக்டரின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுவதாக திமுக தலைமைக் கழகம் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் டாக்டர் மகேந்திரனின் ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் திரை மறைவில் என்ன நடந்திருக்கும் என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

சரி டாக்டரை ஓரங்கட்டிய கெட்டிக்காரர் யார் என்பதை பார்ப்போம் இவர் அ.தி.மு.க வில் மாவட்டச் செயலாளராகவும், அ.தி.மு.க ஆட்சியின் போது 2014ல் கோவையின் 5-வது மேயராகவும் பதவி வகித்தவர் பின்பு அ.தி.மு.க வில் இருந்து விலகி தி.மு.க வில் இணைந்தார். 2014ம் ஆண்டு மாநகராட்சி மேயர் தேர்தலின் போது பா.ஜ.க வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க வின் தேர்வு சரியா தவறா என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன். வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல நமது உரிமையும்கூட என்ற சிந்தனையோடு

தமிழக துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp