கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதியான குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாரில் அமைந்திருக்கும் ஶ்ரீ தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று கொண்டு வருகிறது. அங்கு இன்று காலையில் ஜித்து என்ற வாலிபனும் அவனுடன் சக நண்பர்களும் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளனர். போகும் வழியில் நண்பர்களுடன் சாலையில் நடந்து வருகையில் ஜித்துவிற்கும் எதிர் வந்த மேக்ஸ் என்ற ராஜா என்ற நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஜித்துவும் அவருடன் வந்த நான்பர்களும் சேர்ந்து ராஜாவை தாக்கி உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆத்திரமடைந்த ராஜா தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக ஜித்துவை குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். காயமடைந்த ஜித்துவை உடனடியாக வண்டிப்பெரியார் கேரளா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எவ்வளவோ முயற்சி செய்து சிகிச்சை பலனின்றி ஜித்து உயிரிழந்தார் உடனடியாக வண்டிப்பெரியாறு காவல் துறையில் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒன்றாம் மயிலை சார்ந்த ஆட்டோ ஓட்டுனரான மேக்ஸ் என்ற ராஜா வை கைது செய்துள்ளனர். தற்பொழுது விசாரணை நடந்து கொண்டு வருகிறது. கொலையின் பின்னணி மற்றும் நோக்கம் விசாரணை முடிவில் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூனாறு.