தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மனைவி சின்னமணி(35) இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். இந்த சூழ்நிலையில் தனது வீட்டை தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டைக்கு மாற்றி அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்துள்ளார். நேற்று காலை சின்னமணி தனது வீட்டிற்கு எப்போதும்வென்றான் வந்துள்ளார். அப்போது கணவரின் தம்பியான பண்டாரம் மகன் ராஜேஷ்கண்ணன் சின்னமணியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஊருக்கு செல்வதற்கு எப்போதுவெண்றான் பாஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளார். அப்போதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் ராஜேஷ்கண்ணன் மறைத்து வைத்திருந்த அறிவாளால் வெட்டி உள்ளார். இதில் சின்னமணி சம்பவ இடத்திலே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து எப்போதுவெண்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொருப்பு) முருகன், சப் இன்ஸ்பெக்டர் அந்தோனிபிலிப் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த சின்னமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அரிவாளுடன் ராஜேஷ்கண்ணன் எப்போதும்வென்றான் போலீஸில் நான் எனது அண்ணன் மனைவியை கொலை செய்தேன். தவறான பாதையில் சென்றதால் கொலை செய்தேன் என் ஒப்பு கொண்டார். இச்சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பொதுமக்கள் தூத்துக்குடி மற்றும் பல இடங்களுக்கு செல்லும் பஸ் ஸ்டாண்டில் நடந்த கொலையால் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.