கோவை போத்தனூர் குருசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் சமீனா பேகம் (33). இவர் கணவரைப் பிரிந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். துணிக்கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவரது மகன் முகமத் சன்ஃபர்(12). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் முகமது சன்ஃபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குறிச்சி குளம் அருகே விளையாட சென்றார். அப்போது விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுவனின் தாய் சமீனா பேகம் தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போத்தனூர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.