குறிச்சி குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி!! காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை!!!

கோவை போத்தனூர் குருசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் சமீனா பேகம் (33). இவர் கணவரைப் பிரிந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். துணிக்கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவரது மகன் முகமத் சன்ஃபர்(12). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் முகமது சன்ஃபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குறிச்சி குளம் அருகே விளையாட சென்றார். அப்போது விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுவனின் தாய் சமீனா பேகம் தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போத்தனூர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp