கோவில்பட்டி பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி!!

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தில் கைவினைப் பொருள்களின் கண்காட்சி நடந்தது.

நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது கலை திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களிலிருந்து 500 க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களை தயார் செய்து கண்காட்சியில் வைத்திருந்தனர். கைவினைப் பொருட்கள் கண்காட்சியிணை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன்,மணிக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா கைவினைப் பொருட்களின் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டு ஆங்கிலத்திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் நாகராஜ்,மேற்பார்வையாளர் பட்டாணி உள்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள்காந்த்ராஜ் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp