கோவை மாவட்டம் போத்தனூர் காவல்துறை சார்பில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காவல்துறையினர் இனிப்புகள் வழங்கியும் குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியும் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுந்தராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ரவி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு தந்தை உள்ளத்தோடு அவர்களுக்கு புரியும்படி அறிவுரை வழங்கினார். மேலும் நூறு குழந்தைகளுக்கு போர்வை, கேரம், காயின், செஸ், போர்டு. காயின். வாலிபால் ரப்பர் வளையம் மற்றும் ஏராளமான விளையாட்டு உபகரணங்களை வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஆபத்து நேரங்களில் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது குறித்து குழந்தைகளுக்கு புரியும் படி எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் போத்தனூர் க்ரைம் ஆய்வாளர். வெற்றிச்செல்வி,துணை ஆய்வாளர் செல்வம் . மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் மேலும் மதுக்கரை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.