கோவை மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க
பயணிகள் ஆட்டோவில் நீர் மோர் வைத்து அதை ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கும்
மற்றும் ஆட்டோ செல்லும் இடங்களில் உள்ள பொதுமக்களுக்கும் வழங்கி வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக துவங்கப்பட்டு இந்த ஆட்டோவில் நீர் மோர் திட்டத்தை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் மற்றும் இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முதல் கட்டமாக ஐந்து ஆட்டோக்களில் துவங்கியுள்ள இந்த நீர் மோர் திட்டம் படிப்படியாக புறநகர் மற்றும் நகர் பகுதிகளில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். பயணிகள் ஆட்டோவில் துவங்கப்பட்டுள்ள இந்த நீர் மோர் வழங்கும் பயணிகளும் பொதுமக்களும்வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.