பறக்கும் படை அதிரடி ஓட்டப்பிடாரம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் டிவிஎஸ் எக்ஸ்எல் கொண்டுவரப்பட்ட ரூ.86 ஆயிரம் பறிமுதல்.!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் கொண்டுவரப்பட்ட ரூ.86 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள். நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் தூத்துக்குடி கூட்டுறவு வங்கி தணிக்கையாளருமான ரவிகுமார் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி அண்ணா நகர்12-வது தெருவை சேர்ந்த இசக்கியாடும்பெருமாள் மகன் சிவசுப்பிரமணியன்(53) என்பவர் குருக்குசாலை இருந்து ஓட்டப்பிடாரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இல்லாமல்கொண்டு வரப்பட்ட ரூ.86378-த்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இந்த பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் சுடலைமாடனிடம் ஒப்படைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp