கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அடுத்து செக்கு பள்ளம் என்ற பகுதியை சேர்ந்த வினிஷ் ஆப்ரகாம் ஷீபா தம்பதியினருக்கு எதிராக குமுளி காவல்துறையினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். சில ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்த சீபா அங்கு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை தங்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தற்பொழுது ஒன்றரை வயது ஆகிய நிலையில் குழந்தையை அருகிலுள்ள அங்கன்வாடியில் சேர்க்க சென்றுள்ளனர். அங்கு தகவல் சேகரிக்கும் பொழுது குழந்தையை உத்திரபிரதேசத்தில் இருந்து கொண்டு வந்ததாகவும் விலைக்கு வாங்கியதாகவும் தெரிவிக்க உடனடியாக அங்கன்வாடி ஆசிரியர் இடுக்கி சைல்டு லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க செய்துள்ளார்.
இதன் பெயரிலேயே குமுளி காவல் துறையினர் தம்பதிகளுக்கு எதிராக வளர்க்க தொடர்ந்து உள்ளனர் தற்போது தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.