போலி பத்திரம் மூலம் ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க உதவிய சார்பதிவாளர், உதவியாளர்களுடன் கைது!

சென்னை தாம்பரத்தில் 3 ஏக்கர் நிலத்தை ஒரு கும்பல் போலி ஆவணம் மூலம், பதிவு செய்வதற்காக தாம்பரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய மணிமொழியனிடம் தொடர்பு கொண்டுள்ளனர். அவரும், அவரது உதவியாளர்கள் லதா, சபரீஸ் ஆகியோர் உதவியுடன் போலியான பத்திரத்தை பதிவு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். அதற்காக ரூ.300 கோடி மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்கனவே கிரையம் செய்ததுபோல அடமான பத்திர ஆவணத்தை நீக்கிவிட்டு கிரைய பத்திர ஆவணத்தை சேர்த்து ஒளிவருடல் செய்துள்ளனர். பின்னர் வில்லங்க சான்றிதழிலும் அதை பதிவேற்றம் செய்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று 2021 செப்டம்பர் மாதம், காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
தீவிரத்தை உணர்ந்த நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் குற்றம் நடந்தது உண்மை எனத் தெரியவந்தது. உடனடியாக மணிமொழியனின் உதவியாளர்கள் லதா, சபரீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த குற்றத்தில் மணிமொழியன்தான் முக்கிய நபர் எனத் தெரியவந்தது.

குற்றம் நிகழ்ந்த போது தாம்பரத்தில் சார் பதிவாளராக இருந்த மணிமொழியன், தற்போது கோவை கணபதியில் சார்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனால் சிபிசிஐடி போலீசார் கோவைக்குச் சென்று மணிமொழியனை கைது செய்தனர். பின்னர் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், வில்லங்கச் சான்றில் பதவி வேற்றம் செய்ய அன்றைய நிர்வாக மாவட்டப்பதிவாளர் ரவீந்திரநாத் எட்டு முறை வில்லங்க சான்றை திருத்தம் செய்ததாக ரவித்திரநாத்திற்கு எதிராகவும், கைதான நபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இதனால், இந்த விவகாரத்தில், மேலும் பலர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

– ராயல் ஹமீது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp