தூத்துக்குடி மாவட்டத்தில் 67 கிராமஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 67 கிராம ஊராட்சிகளில் கடந்த 11ம்தேதி முதல் 15ம் தேதி வரை சமூகத்தணிக்கை நடந்தது.கிராம வள பயிற்றுநர்கள் சமூகத் தணிக்கையின் போது தயார் செய்த அறிக்கை கிராம சபை கூட்டத்தில்ஒப்புதல் பெறப்பட்டது.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சில்லாநத்தம் கிராம ஊராட்சியில் நடந்த சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் சண்முக லட்சுமி தலைமை வகித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சரஸ்வதி அனைவரையும் வரவேற்றார்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய சமூகத்தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து பேசினார்.
கிராமவளபயிற்றுனர் ராஜேஸ்வரி சமூகத் தணிக்கை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
,கிராம வளபயிற்றுநர்கள் வெள்ளத்தாய், முருகலட்சுமி, பாஞ்சாலி உள்பட பணித்தள பொறுப்பாளர்கள்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.மக்கள் நல பணியாளர் சுப்பையா நன்றி கூறினார்.இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 67 கிராம ஊராட்சிகளிலும் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.