ஆனைமலை சாலையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பு மரங்களைப் பாதுகாக்க மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை
தாத்தூர் முதல் அம்பராம்பாளையம் சுங்கம் வரை நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மரங்களை சாலை விரிவாக்க பணிக்காகவும் சாலை விபத்துகளுக்காகவும் என்று கூறி சாலையோர மரங்களை வெட்டப் போவதாக கூறப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் சாலையோர மரங்களை வெட்டுவதற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூகத் தன்னார்வலர்களும் ஆனைமலை ஆலம் விழுது குழுவினரும் ஆனைமலையில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி இன்று காலையில் இது குறித்து புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது ஆனைமலை என்றாலே இயற்கை
எழில் கொஞ்சும் மரங்களும் ஆனைமலை நல்லாறும். கடந்த
ஒரு மாதமாக எங்கள் குழுவிற்கு தாத்தூர் முதல் சுங்கம் வரை
உள்ள சாலையோரம் மரங்களை வெட்டப்போகிறார்கள் என்ற செய்தி வந்து கொண்டு
உள்ளது. காரணம் கேட்டால் சாலை விரிவாக்கம் மற்றும் விபத்துக்கள்
ஏற்படுவதை காரணமாக கூறி வருகிறார்கள்.

இதுகுறித்து
ஆலம்விழுது குழு சார்பாக கூறிக் கொள்வது நமது ஊருக்கு
சாலை விரிவாக்கம் தேவையில்லை அப்படியே விரிவாக்கம்
தேவை என்றால் இரண்டு அடிகள் இரண்டு புறந்திலும் அகல
படுத்திக் கொள்ளுங்கள். மேலும் மரம் வெட்டும் எண்ணம்
இருந்தால் இத்தோடு நிறுத்தி கொண்டு இந்த திட்டத்தை
கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மீறினால் ஆலம் விழுது குழு சார்பாக அனைத்து ஊர்
பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களை இணைத்து மிகபெரும்
போரட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்  பாபா ரமேஷ் பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்
ஆனைமலை,
-P.சின்ன முத்துசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp