ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டியில் தி.மு.க தேர்தல் காரியாலயத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.!!!

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டப்பிடாரம் அருகே முப்பிலிவெட்டியில் தி.மு.க தேர்தல் தலைமை காரியாலயம் திறப்பு விழா நடந்தது. திறப்பு விழாவிற்கு சண்முகையா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா முன்னிலை வைத்தார். அப்போது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தேர்தல் காரியாலயத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது, தூத்துக்குடி பாராளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் பொழுது மக்களுக்கு தொன்றாட்டும் எம்.பி.யாக செயல்படுவார். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் அளவிற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் விவசாயிகள் பிரச்சனை மீனவர்கள் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வார். தமிழக அரசின் மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் இவர் அவர் பேசினார்.

அப்போது மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றிக்கான புறாவைப் பறக்க விட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp