கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் அருகே அமைந்துள்ள இரவிகுளம் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு மிக அரிய இனமான வரையாடு மிகவும் பிரசித்த பெற்றது இதனை காண எல்லா வருடங்களிலும் பல லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த வருடத்தில் இனப்பெருக்கத்திற்காக ஜனவரி மாதம் அடைக்கப்பட்ட இரவிகுளம் தேசிய பூங்காவானது நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
புதிதாக 100க்கும் மேற்பட்ட வரையாடுகள் பிறந்திருப்பதாக கணக்கில் தெரிவித்துள்ளனர் மற்றும் அநேக சுற்றுலா பயணிகள் வந்து வரிசையில் காத்திருப்பது மிகவும் அவதிக்கு உள்ளாக்கப்படுவதாக த்ரிவிக்கப்பட்ட நிலையில் இந்த முறை சுற்றுலாத்துறையின் சார்பாக கியு ஆர் கோடு மூலமாக வாட்ஸப் மூலமாக புக் செய்து கொள்ள முடியும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மட்டுமல்லாது குழந்தைகளுக்கு 150 ரூபாயும் வயதானவர்களுக்கு 200 ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 500 ரூபாய் நிர்ணயம் செய்து வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு 2800 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர். இப்பகுதியை காண சுற்றுலா சுற்றுலா வரும் பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் தற்பொழுது கியூ ஆர் கோடு மூலமாக இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.