சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது…

17-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி சார்பில் கேப்டன் ருதுராஜ் 69 ரன்களும் ஷிவம் துபே 66 ரன்களும் எடுத்திருந்தனர். ஆட்டத்தின் கடைசி நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி ஹாட்ரிக் சிக்ஸருடன் மொத்தம் 20 ரன்கள் குவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் பின்னர் 207 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா இறுதிவரை களத்தில் தனது விக்கெடினை இழக்காமல், 63 பந்துகளைச் சந்தித்து 11 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட மொத்தம் 105 ரன்கள் சேர்த்திருந்தார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp