துப்பாக்கி ஏந்திய மத்திய துணை இராணுவப் படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு!

மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விளாத்திகுளத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை இராணுவப் படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்களிப்பதற்காக பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், விளாத்திகுளத்தில் மாநில காவல் துறையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை இராணுவப் படையினர் 100-க்கும் மேற்பட்டோர் விளாத்திகுளம் நகர்ப்பகுதியில் இசைக்கருவிகள் முழங்கியவாறு அணிவகுத்து ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.

தமிழகத்தில், வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதி மக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்குவோம் என்று பொதுமக்களிடம் நம்பிக்கையூட்டும் வகையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், விளாத்திகுளம் டி.எஸ்.பி இராமகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை இராணுவப் படையினர் என 100க்கும் மேற்பட்டோர் இசைக்கருவிகள் முழங்கயவாறு அணிவகுத்து விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கி மதுரை ரோடு, காய்கறி மார்க்கெட், தாலுகா ஆபிஸ் ரோடு, எட்டையபுரம் ரோடு வழியாக சென்று விளாத்திகுளம் ஆற்றுப்பாலம் வரை சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், நம்பிக்கையூட்டும் விதமாகவும் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

விளாத்திகுளம் நிருபர்

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp