தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 17ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதி கட்ட அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில இலக்கிய அணி செயலாளருமான சின்னப்பன் அவர்களும் எட்டையாபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் அதிமுக தொண்டர்கள் வீடு வீடாகவும் கடை கடையாகவும் அதிமுக தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் அநேகம் பேர் கலந்துகொண்டு தங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்திக் கொண்டு இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.