கோவை செட்டிவீதி அசோக் நகரை சேர்ந்தவர் பாலாஜி(25). இவர் பைக் டாக்சி ஓட்டி வருகிறார். நேற்று பாலாஜி செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் அருகே பைக்கில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென பாலாஜியிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாஜியை குத்தினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் இருந்த செல்போன், பைக்கை பறித்து விட்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கத்தி குத்தில் காயமடைந்த பாலாஜி-யை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கத்தியால் குத்தி பைக், செல்போன் பறித்து சென்றது கரும்புக்கடை ஜேஜே கார்டனை சேர்ந்த உஜித் ரகுமான்(27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.