மகனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து உடலை கல்லை கட்டி ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள கிணற்றில் வீசிய தந்தை கைது.!!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மகனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து உடலை கல்லை கட்டி ஓட்டப்பிடாரம் பால்பண்ணை அருகில் உள்ள கிணற்றில் வீசிய தந்தை கைது, பெண் உட்பட இருவரிடம் போலீசார் விசாரணை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த வீரபெருமாள் மகன் பாலசுப்பிரமணியன் (48) என்பவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். இதில் மூத்த மனைவியின் மகன் சுபாஷ்(28) என்பவர் கோவில்பட்டி மேல காலணியில் வசித்து வந்துள்ளார். மேலும் பாலசுப்பிரமணியனுக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (44) என்பவரிடம் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணிடம் சுபாசும் பேசி நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10 அன்று சுபாஷ் தாய் மாமா சவுந்தரராஜன் என்பவர் சுபாசை கடந்த ஏப்ரல் 7 அன்று இரவு முதல் காணவில்லை என கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவரது புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இன்று காலையில் சுபாஷ் தந்தை பாலசுப்பிரமணியனை சந்தேகத்தின் பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டியில் வைத்து பாலசுப்பிரமணியன் இரும்பு கம்பியால் தனது மகன் சுபாஷை தாக்கி கொலை செய்து ஓட்டப்பிடாரம் பால் பண்ணை பகுதியில் உள்ள கிணற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார். இதை அடுத்து ஓட்டப்பிடாரம் பாளையங்கோட்டை சாலையில் உள்ள பால் பண்ணை அருகில் உள்ள கிணற்று தண்ணீரில் அழுகிய நிலையில் மிதந்த சுபாஷின் உடலை போலீசாரிடம் அடையாளம் காட்டினார். தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் போலீசார் அழுகிய நிலையில் இருந்த சுபாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுபாஷின் உடலின் அடிப்பகுதியில் குத்துக்கல்லை உடலில் கட்டி இருந்ததும் தெரியவந்தது சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணியனின் இரண்டாவது மனைவியின் 17 வயதுடைய மகன் மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp