தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகன பேரணி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதனை ஒட்டி ஓட்டப்பிடாரம் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகன பேரணி நேற்று காலை வட்டாட்சியர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.
முதலில் வட்டாட்சியர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் பொதுமக்கள் கையெழுத்திட்டானர் பின்னர் இந்த வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகனமானது சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் மணியாச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜன் வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.