வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த காா்ணாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத். விவசாயி. இவரது மகன் சா்வேஷ் (15). வேலூரில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், அண்மையில் வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 351 மதிப்பெண் பெற்றுள்ளாா். இதனால், அவருக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சில நாள்களாக அவா் விரக்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற 11-ஆம் வகுப்புக்கான நுழைவுத் தோ்வுக்குச் செல்லாமல் சா்வேஷ் வீட்டில் உள்ள அறையில் தனியாக இருந்துள்ளாா். வெகு நேரமாகியும் அவா் வெளியே வராததால், அவரது பெற்றோா் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பாா்த்தபோது சா்வேஷ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாா்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சா்வேஷ் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை வருகின்றனா்.
-வேலூர் ரமேஷ்.