கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு அருகே உள்ள மறையூர் பகுதியை சார்ந்த காந்தலூர் என்ற பகுதியில் காந்தலூர் பெஸ்ட் எல்லா வருடமும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் மே 7- ம் தேதிமுதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காந்தலூர் திருவிழா பெஸ்ட் உடன் சேர்ந்து இங்கு விளையும் பலவிதமான பழங்கள் ஆப்பிள் பழம், பிளம்ஸ், பலா, மற்றும் பலவிதமான பழங்கள் வெள்ளை பூண்டு மறையூர் காப்பி மற்றும் மறையூர் சர்க்கரை போன்றவைகள் மிகவும் குறைவான விலையில் விற்கப்படும்.
மட்டுமல்லாது இங்கு சுற்றுலா தளம் ஆக்கப்பட்டு மர வீடுகள் , மண் வீடுகள் மற்றும் டென்ட் ஹவுஸ் எனப்படும் அனைத்து வகையான தங்கும் வசதிக்கான சுற்றுலா தளங்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது.
சந்தன மரக்காடுகளை சுற்றியுள்ள பகுதியானது நீர்வீழ்ச்சி போன்ற பல்வேறு அமைப்புகளை கொண்டு மிகவும் அழகுடன் காட்சியளிக்கும்.
சுற்றுலா காண வரும் அனைவரும் இந்த நேரங்களில் காந்தலூர் பகுதியில் தங்குவதால் அங்குள்ள திருவிழாக்களையும் கண்டு களிக்க முடியும் அங்குள்ள அரிதான பழங்களை பொருட்களையும் மலிவான விலைக்கு வாங்க முடியும் இதில் சிறப்பு விருந்தினராக தேவிகுளம் எம்.எல். ஏ வழக்குரைஞர் A .ராஜா அவர்கள் கலந்து கொள்ளுகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.