வால்பாறையில் எலும்பு முறிவு மருத்துவர் இல்லாததால் பொதுமக்கள் அவதி இது குறித்து
தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு வால்பாறை பரமசிவம் கோரிக்கை:-
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி பரமசிவம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வால்பாறை பகுதியில் உள்ள அடித்தட்டு மக்கள் சுற்றுலா பயணிகள் எலும்பு முறிவு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு எலும்பு முறிவு நோய் தொடர்பாக சரி செய்யப்பட்டு மிகவும் சந்தோஷப்பட்டனர்.
இதனால் அரசுக்கும், ஆட்சியாளருக்கும் பெருமை சேர்த்தது கடந்த இரண்டு நாட்களாக வால்பாறை அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவர் இல்லாததால் பொள்ளாச்சி கோவை மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதால் இப்பகுதியில் இருக்கும் அடித்தட்டு மக்கள், சுற்றுலாப் பயணிகள், எலும்பு முறிவு சிகிச்சை பெற வருபவர்கள் வயதான முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இவர்களுக்கு பண விரயமும் நேர விரையமும் ஏற்ப டுகிறது 40 கொண்ட ஊசி வளவு கடந்து இரண்டரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது என்பதை தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன் . இப்பகுதியில் உள்ள குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா வரும் பயணிகள் தொழில் இல்லாமல் வேலை இல்லாமல் சிரமப்படும் அடித்தட்டு மக்கள் எலும்பு முறிவு நோயிலிருந்து பாதுகாக்க வால்பாறை அரசு மருத்துவமனையில் நிரந்தர எலும்பு முறிவு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து தருமாறு பொதுநலத்துடன் எந்த எதிர்பார்ப்பு இல்லாம கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-M.சுரேஷ்குமார்.