வால்பாறையில் கனமழை வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்!மக்கள் கண்ணீர் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத வால்பாறை நகராட்சி நிர்வாகம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது வருகிறது.

இந்நிலையில் சிறுவர் பூங்கா பகுதியில் மழைநீர் ஆற்றில் கலக்காமல் குடியிருப்பு பகுதிக்கு செல்வதால் முதியோர், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள், குழந்தைகள் என அனைவரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக வால்பாறை நகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் இப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அரசு அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் தேர்தல் முடிவு வரட்டும் என்ற ஒற்றை வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

அரசு அதிகாரிகள் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தப்பிக்காமல் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கண்ணீருடன் கூறுகிறார்கள் இது குறித்து நமது நிருபர் நேரில் சென்று ஆய்வு செய்த போது உண்மையிலே வால்பாறை நகராட்சியில் மக்களை பாதுகாப்பதற்காக அதிகாரிகள் இருப்பதாக தெரியவில்லை அரசியல்வாதிகளுக்கும், நகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கும்,நகர மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே நகராட்சி அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் இப்பகுதியை ஆய்வு செய்து இன்னொரு மழை வருவதற்குள் இப்பகுதியை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

-P.பரமசிவம், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp