ஹஜ் யாத்திரை: தமிழக அரசு சார்பில் தடுப்பூசி முகாம்!!!

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை மாவட்டத்திலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி (Meningococcal and Seasonal Influenza Vaccine) மற்றும் சொட்டு மருந்து (Oral Polio Vaccine) ஆகியவை செலுத்தப்பட உள்ளது.

மேலும் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இச்சிறப்பு முகாம் 13,14,15 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய், புதன்) நடைபெற இருக்கிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ளனர்.

இதில் முதல் நாள் 120 நபர்களுக்கும், இரண்டாம் நாள் 14 அன்று 119 நபர்களுக்கும், மூன்றாம் நாள் 15 அன்று 115 நபர்களுக்கும் என மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
இதில் 65 வயதுக்கு மேற்பட்ட 49 நபர்களுக்கு மட்டும் Seasonal Influenza Vaccine பிரத்தியோகமாக செலுத்தப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp