கனமழையால் நிரம்பி வழியும் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காலவாய் தடுப்பு அணை!! ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வரும் இளைஞர்கள்!!!

கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காலவாய் தடுப்பு அணை நிரம்பியது.
ஆபத்தை உணராமல் இளைஞர்கள் நொய்யலாற்றில் இறங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் வேகமாக தண்ணீர் நிறைந்து வருகிறது. இந்த நிலையில் கோவை ஆத்துப்பாலம் காளவாய் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணை நிறைந்து நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆத்துப்பாலம், குணியமுத்தூர், கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதி மக்கள் தடுப்பணையின் கரை ஓரங்களில் மீன் பிடித்து வருகின்றன்.

அதிலும் சிலர் தண்ணீரில் இறங்கி ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வருகின்றனர். திடீரென வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தால் உயிர்க்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாகைகளை வைத்து பாதுகாப்பு இல்லாமல் மீன் பிடித்துவருபவர்களை கண்காணிக்க வேண்டும் மேலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp