கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காலவாய் தடுப்பு அணை நிரம்பியது.
ஆபத்தை உணராமல் இளைஞர்கள் நொய்யலாற்றில் இறங்கி மீன் பிடித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் வேகமாக தண்ணீர் நிறைந்து வருகிறது. இந்த நிலையில் கோவை ஆத்துப்பாலம் காளவாய் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணை நிறைந்து நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆத்துப்பாலம், குணியமுத்தூர், கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதி மக்கள் தடுப்பணையின் கரை ஓரங்களில் மீன் பிடித்து வருகின்றன்.
அதிலும் சிலர் தண்ணீரில் இறங்கி ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வருகின்றனர். திடீரென வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தால் உயிர்க்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாகைகளை வைத்து பாதுகாப்பு இல்லாமல் மீன் பிடித்துவருபவர்களை கண்காணிக்க வேண்டும் மேலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.