கோவை ஒண்டிப்புதூரை அடுத்த நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு ஹரிணி (9), ஷிவானி(3) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் புஷ்பா, ஹரிணி, ஷிவானி ஆகியோர் மாயமான நிலையில், அவர்களை தேடிய தங்கராஜ், ,மூவரும் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தி தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்த தாய் மற்றும் சிறுமிகளின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தங்கராஜை கைது செய்த சிங்காநல்லூர் போலீசார் அவரிடம் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தண்ணீர் தொட்டிக்குள் தாய் மற்றும் இரண்டு மகள்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒண்டிப்புதூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.