ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி நேரடியாக கோரிக்கைகளை பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மக்களிடம் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதியம்புத்தூர் புதுப்பாண்டிபுரம் சில்லாநத்தம் சாமிநத்தம் தெற்கு வீரபாண்டியபுரம் ஜம்புலிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்காக ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முகாமை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை ஓட்டப்பிடாரத்தில் ஏற்கனவே செயல்பட்ட அரசு தொடக்கப் பள்ளியை மீண்டும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து எம்எல்ஏ சண்முகையா பொதுமக்களிடம் கூறுகையில் கனமழையால் வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் ஆய்வு செய்து வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதியோர் உதவித்தொகை மகளிர் உரிமைக்காக விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பொதுமக்களின் மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டு பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகளையும் எம்எல்ஏ சண்முகையா வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், சிவில் சப்ளை மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுசிலா, நில எடுப்பு தாசில்தார் செல்வகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செந்தூர்மணி திமுக நகரச் செயலாளர் லிங்கராஜ் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் வர்த்தக அணி முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில்
ஓட்டபிடாரம்.