கோவை மாவட்டம் வால்பாறையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் மரங்கள் வளர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் இப்பகுதிக்கு வரும் ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமும் மரத்தின் கிளைகளை அகற்றச் சொல்லி பலவேறு மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பகுதியில் இருக்கும் தமிழக வணிக சம்மேளனம் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கூறும் பொழுது வால்பாறை நூலகம் முன்பும், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலும் மற்றும் மார்க்கெட்டில் உள்ள வளையல் கடை வீதியிலும் மரங்கள் உயரமாக உள்ளது.
மலையும் காற்று அடிக்கும் நேரத்தில் அருகில் இருப்பவர்கள் உயிரை கையிலே பிடித்துக் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. இந்நிலையில் இப்பகுதியில் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கட்டாயமாக இருக்க வேண்டியும் ,பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இது தொடர்பாக பல மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் தமிழக அரசு வருமுன் காப்போம் வருவதற்கு முன் சாமானிய மக்களே பாதுகாப்போம் என்று கூறுகிறார்கள். அதற்கு வால்பாறை பகுதி விதி விலக்கா என்பது தெரியவில்லை கடந்த சுமார் பத்தாண்டுக்கு முன்பு வால்பாறை அண்ணா சிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் சிறுவன் மீது மரம் விழுந்து உயிரிழந்து உள்ளான். அப்பொழுது இருந்த ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் வால்பாறை பகுதியிலே ஆபத்தான இருக்கும் மரங்களை அகற்றுவேன் என்று உறுதி அளித்தார்கள் ஆனால் இன்று வரை கேள்விக்குறியாக உள்ளது. இனியாவது ஏதாவது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
நாமும் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்தோம் உண்மையைச் சொன்னால் ஆட்சியாளர்களும், ஆளுங்கட்சிக்காரர்களும் கவலைப்படுவார்கள் சொல்லாமல் இருந்தால் வரும் காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நேரிடலாம் இதைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம் வால்பாறை.