கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தளமான மூணாறு பகுதிக்கு தமிழ்நாட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் தம்பதிகளான காரமடையை சேர்ந்த ஹரிஹரன் பிரியதர்ஷினி சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலாப் பகுதிகளில் கண்டு களித்துள்ள அவர்கள் மூணாறில் இருந்து கோவைக்கு மறையூர் வழியாக செல்லும் வழியில் இலக்கம் நீர்வீழ்ச்சி பகுதியில் அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டிழந்து தேயிலை தோட்டத்தில் கீழ் பகுதியில் போய் விழுந்ததுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஹரிஹரன் பிரியதர்ஷினி இருவரையும் அப்பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக முன்னிட்டு ஜிப்பில் ஏற்றி வாகுவாரை கம்பெனி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து பின்னர் மூணார் டாட்டா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
பலமுறை அந்த பகுதியில் விபத்து நடப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். பொதுத்துறையி இடமும் பஞ்சாயத்து அலுவலகத்திலும் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஒரு தடுப்பு சுவர் அமைக்க கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.