கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதிகளுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாவிற்கு பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்பொழுது வெளி மாநிலங்கள் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் இளைஞர்கள் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்களிலும் வரும் இளைஞர்கள் சாலை விதிகளை மீறி கைகளை விட்டு ஸ்டண்ட் செய்வதும் வாகனத்தின் கதவுகளை திறந்து விட்டு வெளியே நின்று வருவதும் மேலே ஏறி உட்கார்ந்து பயணம் செய்வதும் வழக்கமாகி வருகிறது.இதே போன்று ஒரு சம்பவம் கடந்த மாதம் அரங்கேறியது உடனடியாக காவல்துறை கண்காணித்து வாகனத்தை உடனடியாக படித்தனர். வாகனம் ஓட்டுனரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நேற்று சுற்றுலா வந்த வடமாநிலத்தை சார்ந்த சுற்றுலா பயணிகள் காரின் சன்னல் கதவில் அமர்ந்து பயணம் செய்தது வீடியோ எடுத்து வெளியிட உடனடியாக காவல்துறையிநர் அவர்களை கைது செய்து வாகனத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் பொழுது உடனடியாக காவல்துறை கண்காணித்து முடிவெடுக்கும் பட்சத்தில் இதே போன்ற தவறுகள் நடக்காமல் விபத்துகளும் தடுக்கப்படும் என்பது முக்கிய வேண்டுகோள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-ஜான்சன் மூணாறு.