கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியை சுற்றிலும் 50ற்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளுக்கு சென்று வர வால்பாறையில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறை அக்கா மலை பகுதியில் இருந்து கருமலைக்கு வரும் வழியில் சாலை ஓரம் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணி முடிவு பெற்ற பிறகு சாலையோரம் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சமீபகாலமாக பெய்து வரும் மழையினால் குழி தோண்டப்பட்ட இடங்களில் மூடப்பட்ட மண் இறுக்கமாக இல்லாமல் இலகுவாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்த பகுதியில் வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட சாலையை விட்டு சிறிது இறங்கி வரும் பொழுது இந்த குழிகளில் சிக்கி விபத்து ஏற்படுகிறது.
இந்தப் பகுதி மிகவும் குறுகலாக உள்ள காரணத்தினால் குழிகளில் இறங்கி வாகனம் நின்று விட்டால் மற்ற வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது மேலும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலை குறுகலாக ஆகிவிடுகிறது இதனால் பேருந்துகளில் வரும் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை தரமான முறையில் மூடி மீண்டும் குழிகள் ஏற்படாதவாறு சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.