கோவை மாவட்டத்தில் தடாகம் மாங்கரை கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால் விளைநிலங்கள் சேதமாகி வருகின்றன.
நேற்று முன்தினம் தடாகம் தண்ணீர் பந்தல் பகுதிக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த ஓலை குடிசையை சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று இரவு திருவள்ளுவர் நகர் பகுதிக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்தன. அப்போது ஒரு வீட்டார் யானையைப் பார்ப்பதற்கு கேட்டின் முன்பு நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு காட்டு யானை அவர்களை தாக்க முற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் வீட்டிற்குள் சென்றதால் உயிர் தப்பினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை அக்கம் பக்கத்தினர் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்பொழுது இந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருவதால் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.