விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ரெய்டு : கையும் களவுமாக சிக்கிய செயல் அலுவலர்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் லஞ்சம் வாங்கியதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் இன்று தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான போலீசார் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் நடத்திய திடீர் சோதனையில் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரனின் அலுவலக அறையிலருந்தும்,

அவரது டிரைவர் மாரிச்செல்வத்திடம் இருந்தும் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணத்தினை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றி விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செயல் அலுவலர் மகேஸ்வரன் பிளாட் அப்ரூவலுக்காக இந்த ரூ.1,34,500 லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில்‌ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற பணியாளர்கள் அனைவரிடமும் சோதனை மேற்கொண்டு இதில் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp