கோவை சோமையம் பாளையத்தை சேர்ந்தவர் பிரபு(40). இவருக்கும், லாவண்யா என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிரபுவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில், பிரபுவின் தாய் கலாவதி மற்றும் மனைவி லாவண்யா இருவரும் அவர்கள் நடத்தும் டிபன் கடைக்கு சென்று விட்டனர். வீட்டில் பிரபு மட்டும் தனியாக இருந்தார்.
இதனையடுத்து மதியம் 2 மணியளவில் லாவண்யா வீட்டுக்கு வந்தார். அப்போது பிரபு மயங்கி கிடந்தார். இதனையடுத்து அவர் உடனே தனது மாமியார் கலாவதியை தொடர்பு கொண்டு, விவரத்தை கூறினார். இதனால் பதறி போன கலாவதி வீட்டுக்கு சென்ற போது கழுத்தில் காயத்துடன் வீங்கிய நிலையில் பிரபு உயிரிழந்து கிடந்தார். இதனை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கலாவதி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் உடல் நலக்குறைவால் பிரபு உயிரிழந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.