கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் அருகே மூணாருக்கும் சூரியநல்லி எஸ்டேட் இடையில் உள்ள கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கேப் ரோடு என்ற இடத்தில் பொதுவாகவே மழை காலங்கள் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உடைந்து. சாலைகளை சேதப்படுத்துவது வழக்கம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவ்வாறு இந்த வருடமும் அதிக கனமழை காரணமாக கேப்ரோடு சாலை மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. தற்பொழுது மழை குறைந்து உள்ளது.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக சாலையை சரி செய்ய மாவட்ட துணை ஆட்சியர் ஜெயக்ருஷ்ணன் உத்தரவு கொடுத்துள்ளார். அப்பகுதியில் வசிக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மக்களுக்கும் இது இடையூறாக உள்ளது. மட்டுமல்லாமல் படிக்கும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டதினால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் பகுதி மக்கள் உடனடியாக சாலை சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகளும் இணைந்து கோரிக்கை வைத்தனர் அதனடிப்படையில் தற்போது உடனடியாக சாலை சீரமைக்கும் பணி நடைபெற இருக்கிறது.
சில தினங்களில் கேப் ரோடு சாலை சீரமைக்கப்பட்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.