கோவை ஆலாந்துறையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்…!! விவசாயிகள் அச்சம்!!!

கோவை ஆலந்துறை அடுத்த இருட்டு பள்ளம் பகுதியில் கேட்டை திறந்து ஒற்றை காட்டு யானை உள்ளே வந்தது. உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் குடியிருப்பு, தோட்டப் பகுதிக்கு வருவதால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவையில் மருதமலை, தொண்டாமுத்தூர், ஆலந்துறை, சோமையம்பாளையம், தடாகம் ஆகிய பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் தோட்டத்திற்குள் புகுந்தும், குடியிருப்புகளில் புகுந்தும் அட்டகாசம் செய்வதும் தொடர் கதையாகி வருகின்றன.

வனத்துறை சார்பில் மருதமலை, சோமையம்பாளையம் ஆகிய பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை ஆலந்துறை அடுத்த இருட்டு பள்ளம் பகுதியில் விவசாய தோட்டங்களில் பணி புரியும் கூலித் தொழிலாளர்கள் தங்க ஓட்டு வீடுகள் உள்ளது. அங்குள்ள ஒரு தோட்டத்துக்குச் செல்லும் இரும்புக் கதவை திறந்து உள்ளே வர ஒற்றை காட்டு யானை முயன்றது.
அப்போது வாகனத்தின் சத்தத்தைக் கேட்டு திரும்பிச் சென்று உள்ளது ஆனால் மீண்டும் அங்கு வந்து உணவு தண்ணீர் தேடி உள்ளது இரவு நேரங்களில் காட்டு யானைகள் அலைவதால் அப்பகுதிகளில் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம் துணைத் தலைவர் ராஜேந்திரன், பிரகாஷ் மற்றும் வேலுச்சாமி என்பவர்களது தோட்டங்களில் உள்ள ஓட்டு வீடுகளில் உணவு தேடி ஒற்றைக் காட்டு யானை சென்று உள்ளது.
மேலும் அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை, தென்னை பாக்கு போன்ற பயிர்களை சேதத்தை ஏற்படுத்தி சென்று உள்ளது. இதுதொடர்பாக வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அங்கு வனத்துறை செல்வதற்கு முன் ஒற்றைக் காட்டு யானை காட்டுப் பகுதிக்குள் சென்றது.
வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து மனித – வனவிலங்கு மோதலை தடுத்தும், பயிர்களை பாதுகாத்து வரும் சூழ்நிலையில், ஒன்று அல்லது கூட்டத்துடன் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு உள்ளன. இவை அவ்வப்போது ஊர்களுக்கும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதனை தடுக்க அரசு மற்றும் வனத் துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதி மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் மற்றும் வாழ்வாதாரத்திற்கும் வழிவகை ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp