கோவை மாவட்டத்தில் புகார்ப் பகுதிகளில் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் கோவை மாவட்ட போலீஸாா் நேற்று திடீா் சோதனை நடத்தினா். சமூக விரோதிகளின் நடமாட்டம், போதைப் பொருள்களின் பயன்பாடு மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்காணித்தல் உள்ளிட்டவற்றுக்காக கோவை மாவட்டத்தில் 45 இடங்களில் போலீஸாா் நேற்று திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சோதனை இன்று அதிகாலை வரையிலும் நீடித்தது. வாகன சோதனை மட்டுமல்லாமல், தனியாா் தங்கும் விடுதிகளிலும், பெட்டிக் கடைக ளிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அத்துடன் கல்லூரி மாணவா்கள் தங்கும் அறைகளின் அருகில் வெளியாட்கள் யாராவது தங்குகிறாா்களா எனவும், அப்பகுதிகளில் போதைப் பொருள்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாகக் கண்காணித்தனா். அதேபோல, டாஸ்மாக் மதுக் கூடங்களிலும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.