கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் வரும் 28 ஆம் தேதி வரை கனமழை பொழியும், அடர்ந்த காற்று வீசப்படும், மற்றும் அங்கங்கே நிலச்சரிவு ஏற்படும் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மிகுந்த குழப்பத்திலும் வேதனையிலும் அடுத்து என்ன நடக்குமோ என்று பயத்தில் உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறை வணிகர் சம்மேளனம் அமைப்பின் சார்பாக அடர்ந்த மரங்களும், ஆபத்தான வாதுகளும் அகற்றவும் வால்பாறை பகுதியில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள், எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று மனு கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் தற்பொழுது வால்பாறை சேக்கல் முடி எஸ்டேட்டை சேர்ந்த 4 வயது சிறுவன் மரம் விழுந்து உயிரிழந்தார். அவரது தகப்பனார் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
இப்படி அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தாங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வால்பாறை வணிகர் சம்மேளனம் கண்டனத்தை தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இதுகுறித்து கேள்வி முன் வைத்தனர்.
அதற்கு பதில் அளித்த வட்டாட்சியர் கூடிய விரைவில் எஸ்டேட் பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற எஸ்டேட் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களையே உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரும் நாட்களில் கடும் மழையும் காற்றும் வீசுவதாகவும் நிலச்சரிவு ஏற்படுவதாகவும் பொய்யான தகவலை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அவ்வாறு அதிக மழையோ ,காற்றோ வீசினாலும் ஆபத்து ஏற்படுமாக இருப்பினும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், வாகனம் மூலம் ஒலிபெருக்கி வைத்து பொதுமக்களுக்கு தெரிவிப்போம் என்று உறுதி அளித்தார்.
வட்டாட்சியர் அவர்களுடன் சந்திப்பின்போது வால்பாறை வணிகர் சம்மேளனதிண் மாநில துணைச் செயலாளர் பரமசிவம்,மாநில செயற்குழு தலைவர் சரவணன் ,வால்பாறை தொகுதி செயலாளர் இப்ராஹிம் ,தலைவர் ரவீந்திரன், செயலாளர் மணிகண்டன், மற்றும் நகர நிர்வாகிகள் கார்த்திக், பாலு ,சுரேஷ், செல்லத்துரை ,இன்னும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.