விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலியானதில் விபத்தை ஏற்படுத்திய வாலிபர் கைது!!!

கோவையில் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஊர்க் காவல்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் டிரைவர் அஜய் ராகுல்(21) என்பவரை போலிசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு கொடிசியா அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஊர்காவல் படை வீரர் பிரபு, மற்றும் பீளமேடு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் மீது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் சம்பவ இடத்திலேயே ஊர்க்காவல் படை வீரர் பிரபு(34) உயிரிழந்தார். மேலும் பலத்த காயங்களுடன் சிறப்பு காவல் உதவியாளர் ரவி(56) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விபத்து குறித்து கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்றதாக காரை ஓட்டி வந்த கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த அஜய் ராகுல்(21) என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp