கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சிறுவனின் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்ற நபர் அமர் வயது 26, மனைவி மஞ்சுளா வயது 24, அவருக்கு இரண்டு வயது குழந்தை ஒன்று உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவர் தேயிலை தோட்டத்திற்கு பணியாற்ற சென்றார். அவர் காட்டில் உள்ளே செடிகளுக்கு உரம் விசிறி கொண்டு இருக்கும் பொழுது காட்டில் பதுங்கி இருந்த கரடி ஒன்று அவரை தாக்கியது.
அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் அழுகை சத்தத்தை கேட்டு அந்த கரடியை விரட்டி பின்பு அவரை எஸ்டேட் வாகனம் கிடைக்காமல் சிறிது நேரம் போராட்டத்திற்கு பின்பே அந்த வாகனம் கிடைத்தது.
அப்பொழுது மருத்துவமனை கொண்டு சென்று அவரை வால்பாறை ஆம்புலன்ஸ் கொண்டு வரவழைக்கப்பட்டு அவரை மேல் சிகிச்சைக்காக அதே ஆம்புலன்ஸில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது போன்ற சம்பவங்கள் அப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயத்துடனும் அச்சத்துடனும் வேலைக்கு செல்லக்கூடிய அவல நிலை உருவாகியுள்ளது. கரடியின் தொந்தரவால் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பு ஏற்படட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.