கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்கள் சதீஸ்குமார் (39), முரளி ராஜ் (33), ராஜ பாண்டி, லேப் டெக்னீசியன் அன்பரசு (37) உள்ளிட்டோர் அத்துமீறியதாக புகார் எழுந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் தங்களிடம் அத்துமீறுவதாக 6 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கல்லூரியில் கோவை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், தவறாக மெசேஜ் அனுப்பியதும்
தெரியவந்தது இதனை அடுத்து சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தது காவல்துறை.
கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.