கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள பூப்பாறை தேனி மாவட்டத்திற்கு செல்லும் வழியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் வாகனத்தை முந்தி செல்வதற்காக வேகமாக ஜிப்பு ஒட்டிய ஓட்டுனர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் போய்விட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அருகே உள்ளவர்கள் பார்த்து இரு சக்கர வாகனத்தில் அடிபட்ட விஷ்ணு என்பவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்து ஏற்பட்ட நேரத்தில் கண்ணாடி உடைந்து கண்ணில் பட்டதாலும் தல்யிலும் கால் மற்றும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார்.
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். ஜிப் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நபரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜகாட்டை சார்ந்த வினோ ஜி என்பவருடைய வாகனம் என்பதை இரவோடு இரவாகவே சாந்தம்பாரை போலீஸ் தேடுதல் வேட்டையில் இறங்கி விடியற்காலைக்குள் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வாகன ஓட்டியை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணார்.