தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குளத்தூர் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் “தூய்மையே சேவை”2024 தூய்மை காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம். குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி தலைமையில் துணை தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன் முன்னிலையில்
தூய்மை சேவை திட்டத்தின் கீழ் தூய்மை காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தூய்மை பணி குறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசுந்தரம் தூய்மை காவலர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கினார். அதில் வரும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய மற்றும் பொதுமக்களுக்கு என்ன, என்ன விழிப்புணர்வு தகவல்கள் எடுத்து கூறவேண்டும் என்று விளக்கம் அளித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதில் மழைகாலத்தில் வீடுகளில் மழைநீர் தேங்காமல் கொசுக்கள் பரவாமல் இருக்க அன்றாடம் பயன்படுத்தும் கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் சளி இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டும். குடிநீரை சூடுபடுத்தி குடிக்க வேண்டும். ஆடு மாடு கோழி இருந்தால் அந்த இடத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். இதனால் கொசுக்கள் பரவாமல் தடுக்க முடியும் என ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் தூய்மை காவலர்கள் விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
மேலும் கலந்து கொண்ட தூய்மை காவலர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குதல் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் கால்நடை மருத்துவர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், குளத்தூர்
ஊராட்சி செயலர் காந்தி ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.