குனியமுத்தூர் பி. கே. புதூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (55) என்ற தொழிலாளி, செப் 6 மாலை குனியமுத்தூர் ஜே. ஜே. நகர் பின்புறம் உள்ள செங்குளம் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி குளத்தில் விழுந்தார். இந்த விபத்தில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், குனியமுத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று (செப்.7) குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.